நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி எதிரே உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:கடந்த சில மாதங்களாகவே நூல் விலை அதிகமாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் இந்த மாதம் மேலும் 40 ரூபாய் விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விலை இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பஞ்சு விலை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்த நிலையில் அடுத்த மாதமும் நூல் விலை உயரும் அபாயம் இருப்பதால் உடனடியாக நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை முழுமையாக தடை செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும், நூல் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழில் அமைப்புகள், தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் நேற்று பஞ்சு விலை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்த நிலையில் அடுத்த மாதமும் நூல் விலை உயரும் அபாயம் இருப்பதால் உடனடியாக நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை முழுமையாக தடை செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும், நூல் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழில் அமைப்புகள், தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.