போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.2.65 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குநர்கள், வங்கி மேலாளர் குற்றவாளிகள் - கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!

போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.2.65 கோடி வரையில் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குநர்கள் மற்றும் வங்கி மேலாளர்கள் குற்றவாளிகள் என்று கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: சேலம் மாவட்டம் வீரபாண்டி இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த 2010 ஆண்டு உயிரி உரங்கள் தயாரிக்கும் சன் பயோ மினியூர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2.65 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதில் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் சக்திவேல், மற்றும் விஜயகுமாரி ஆகியோர் விதிகளை மீறி கடன் வாங்கி மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்த நிலையில் இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

அதே போல கடன் வழங்கி நஷ்டத்தை ஏற்படுத்திய இந்தியன் வங்கி வீரபாண்டி கிளை மேலாளர் பாலசுப்பிரமணியனும் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...