கோவையில் தடையை மீறி பயன்படுத்திய 1586 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு ரூ.14700 அபராதமும் விதிக்கப்பட்டது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ராஜவீதி, உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் 1586 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளால் மொத்தம் ரூ.14700/- அபராதம் விதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.13-க்கு உட்பட்ட ரங்கா மெஜஸ்டிக் மற்றும் அதிர்ஷ்ட லட்சுமி கார்டன் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.13-க்கு உட்பட்ட ரங்கா மெஜஸ்டிக் மற்றும் அதிர்ஷ்ட லட்சுமி கார்டன் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.