பொள்ளாச்சியில் தனது 3 வயது குழந்தையுடன் மனைவி மாயமான சம்பவம் தொடர்பாக கணவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சி மோதிரம் கம்பர் வீதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (26). இவரது மனைவி பாரத பிரியா(23).
இவர்களுக்கு துருவன் என்ற 3 வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 11ம் தேதி பணிக்குச் சென்ற ஜீவானந்தம் மாலை வீடு திரும்பிய போது, அவரது மனைவி மற்றும் குழந்தை இருவரையும் காணவில்லை.
இதையடுத்து, பல பகுதிகளில் தேடியும் அவர்களை காணவில்லை. இதுதொடர்பாக, அவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு துருவன் என்ற 3 வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 11ம் தேதி பணிக்குச் சென்ற ஜீவானந்தம் மாலை வீடு திரும்பிய போது, அவரது மனைவி மற்றும் குழந்தை இருவரையும் காணவில்லை.
இதையடுத்து, பல பகுதிகளில் தேடியும் அவர்களை காணவில்லை. இதுதொடர்பாக, அவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.