கேரளா மாநிலத்திலிருந்து ரயிலில் தப்பி வந்த குற்றவாளியை கையும் களவுமாக பிடித்த திருப்பூர் ரயில்வே போலீசார் அந்த குற்றவாளியை கேரள போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருப்பூர்: கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஷினாய். திருமணமான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6ஆம் தேதி ஷினாய், அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவரது மனைவி பாலக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கேரள மாநிலம், குழல்மண்ணம் போலீசார் ஷினாயை கைது செய்து கேரள சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறையில் இருந்த இன்று பிற்பகல் தப்பித்த ஷினாய், பாலக்காட்டில் உள்ள ரயில் ரயில் நிலையத்தில் இருந்த போது, கேரளாவில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறி தப்பித்து உள்ளார்.
இதை அறிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த குழல்மண்ணம் காவல் நிலைய போலீசார் ஷினாய் புகைப்படத்தை, திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தனர். இதனிடையே ரயிலானது திருப்பூர் ரயில் நிலையம் வந்த போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஷினாய் இருப்பதை அறிந்த திருப்பூர் ரயில்வே போலீசார் அவரை கைது செய்து கேரள மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து திருப்பூர் வந்த கேரள மாநில போலீசார் ஷினாயை கைது செய்து கேரள மாநிலம் அழைத்து சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த அவரது மனைவி பாலக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கேரள மாநிலம், குழல்மண்ணம் போலீசார் ஷினாயை கைது செய்து கேரள சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறையில் இருந்த இன்று பிற்பகல் தப்பித்த ஷினாய், பாலக்காட்டில் உள்ள ரயில் ரயில் நிலையத்தில் இருந்த போது, கேரளாவில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறி தப்பித்து உள்ளார்.
இதை அறிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த குழல்மண்ணம் காவல் நிலைய போலீசார் ஷினாய் புகைப்படத்தை, திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தனர். இதனிடையே ரயிலானது திருப்பூர் ரயில் நிலையம் வந்த போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஷினாய் இருப்பதை அறிந்த திருப்பூர் ரயில்வே போலீசார் அவரை கைது செய்து கேரள மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து திருப்பூர் வந்த கேரள மாநில போலீசார் ஷினாயை கைது செய்து கேரள மாநிலம் அழைத்து சென்றனர்.