கேரளாவிலிருந்து ரயிலில் தப்பிவந்த குற்றவாளி - கையும், களவுமாக பிடித்து கேரள போலீசிடம் ஒப்படைத்த திருப்பூர் ரயில்வே போலீசார்!

கேரளா மாநிலத்திலிருந்து ரயிலில் தப்பி வந்த குற்றவாளியை கையும் களவுமாக பிடித்த திருப்பூர் ரயில்வே போலீசார் அந்த குற்றவாளியை கேரள போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.


திருப்பூர்: கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஷினாய். திருமணமான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6ஆம் தேதி ஷினாய், அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவரது மனைவி பாலக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கேரள மாநிலம், குழல்மண்ணம் போலீசார் ஷினாயை கைது செய்து கேரள சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறையில் இருந்த இன்று பிற்பகல் தப்பித்த ஷினாய், பாலக்காட்டில் உள்ள ரயில் ரயில் நிலையத்தில் இருந்த போது, கேரளாவில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறி தப்பித்து உள்ளார்.

இதை அறிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த குழல்மண்ணம் காவல் நிலைய போலீசார் ஷினாய் புகைப்படத்தை, திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தனர். இதனிடையே ரயிலானது திருப்பூர் ரயில் நிலையம் வந்த போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஷினாய் இருப்பதை அறிந்த திருப்பூர் ரயில்வே போலீசார் அவரை கைது செய்து கேரள மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து திருப்பூர் வந்த கேரள மாநில போலீசார் ஷினாயை கைது செய்து கேரள மாநிலம் அழைத்து சென்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...