உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் வரையில் அபராதமும், தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் சில உணவகங்கள், கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
டீ, காபி, சட்னி, சாம்பார் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் கட்டி கொடுக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து உணவக உரிமையாளர்கள் உடன் நகராட்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் அனுமதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, பயன்படுத்துவது தெரிய வந்தால் கடையை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டீ, காபி, சட்னி, சாம்பார் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் கட்டி கொடுக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து உணவக உரிமையாளர்கள் உடன் நகராட்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் அனுமதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, பயன்படுத்துவது தெரிய வந்தால் கடையை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.