பொள்ளாச்சியில் உணவு பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி உத்தரவு!

உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் வரையில் அபராதமும், தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் சில உணவகங்கள், கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டீ, காபி, சட்னி, சாம்பார் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் கட்டி கொடுக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து உணவக உரிமையாளர்கள் உடன் நகராட்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் அனுமதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, பயன்படுத்துவது தெரிய வந்தால் கடையை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...