கூடலூர் முதுமலை சாலையில் அடிக்கடி புலிகள் கடப்பதால், சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் என, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி: புலிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ள வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி மாறி, பசுமையான சூழல் காணப்படுகிறது. வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தெப்பக்காடு வனச்சரகம், 'சாண்ட் ரோடு' வனப்பகுதியில் உள்ள புலி கடந்த சில நாட்களாக, பகலில் சாலையை கடந்து வருகிறது.
இதுகுறித்து முதுமலை கார்குடி ரேஞ்சர் விஜயன் கூறுகையில், இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். புலிகளை பார்த்தால் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றார்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி மாறி, பசுமையான சூழல் காணப்படுகிறது. வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தெப்பக்காடு வனச்சரகம், 'சாண்ட் ரோடு' வனப்பகுதியில் உள்ள புலி கடந்த சில நாட்களாக, பகலில் சாலையை கடந்து வருகிறது.
இதுகுறித்து முதுமலை கார்குடி ரேஞ்சர் விஜயன் கூறுகையில், இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். புலிகளை பார்த்தால் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றார்.