வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை செய்யும் களப்பணி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள தன்னார்வலர்களுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கோவை: மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ள பூண்டி வெள்ளிங்கிரி மலை மற்றும் கோயில் அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை செய்யும் களப்பணி நடைபெற உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள கூகுள் விண்ணப்ப படிவத்தில் உங்களது தகவல்களை பதிவு செய்து தன்னார்வ பணிக்கு கரம் கொடுக்குமாறு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இரண்டு நாட்களும் களப்பணியில் ஈடுபட விரும்புவர்களுக்கு அங்கேயே தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து உள்ளனர். உங்களுக்கு தேவையானவை, பெட்சீட், வாட்டர் பாட்டில் போன்றவற்றை மட்டும் எடுத்து வந்தால் போதுமானது.
இதில் களப்பணி செய்ய விருப்பமுள்ள தன்னார்வலர்கள் கலந்து கொள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
நாள் & நேரம்:
14.5.2022 & 15.5.2022 சனிக்கிழமை காலை 9.00 முதல் ஞாயிறு மாலை 5.00 வரை
இடம்: பூண்டி வெள்ளியங்கிரி மலைச்சாரல்
Google form:https://forms.gle/Wgr4A2B2F14pNG1u9
தொடர்புகொள்ள: 80157-14790, 95667-37318
[email protected]
www.kovaikulangal.org