கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டார்.



கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும் பட்டங்களும் வழங்குகின்றனர்.



இந்த விழாவில் பி.எச்டி., பட்டம் பெற்ற 1687-மாணவர்கள், முதுநிலை, இளநிலை பட்டங்களில் பல்கலை அளவில் முதலிடம் பெற்ற 267-மாணவர்களும், பட்டங்களையும், தங்க பதக்கத்தை பெறவுள்ளனர்.

மேலும், 1,504-பேர் எம்.பில்., 1,50,424-பேர் இளநிலை பட்டமும், 48,034-பேர் முதுநிலை பட்டம் என மொத்தம் 2,04,362 மாணவ - மாணவிகள் பட்டங்கள் பெறவுள்ளனர்.



முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் பட்டம் பெற வந்த மாணவ, மாணவியரின் பெற்றோர்களில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டதால் மாணவியர் மற்றும் உடன் வந்த பெற்றோர் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து தெரிவித்த பட்டம் பெற வந்த மாணவியர், பட்டம் பெறுபவருடன் ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்ற எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என்றும் இன்று காலை வந்தவர்களில் பல பேர், பெற்றோர்களை அழைத்து சென்ற நிலையில், கூட்டம் அதிகமாக உள்ளது என்று கூறி, பெற்றோர்களில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்ற திடீர் அறிவிப்பால், மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பட்டம் பெற வந்த மாணவியர் தெரிவித்தனர்.



இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்கலைக்கழக வாயிலில் காத்திருந்தனர்.



அவர்களில், சிலர் அங்கிருந்த காவலர்களிடம் அனுமதி பெற முயற்சித்த நிலையில், கூட்டம் கூடாமல் இருக்க அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களது பிள்ளைகள் பட்டம் பெறுவதை கண் குளிர பார்க்கலாம் என்று வந்த பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக வருத்தம்பட தெரிவித்தனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...