நூல் விலை உயர்வு: திருப்பூரில் நடைப்பெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு..!

நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் வருகின்ற 16 மற்றும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக எஸ்டிபிஐ கட்சி வர்த்தக பிரிவு தலைவர் பாபு தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தொழில் கூட்டமைப்பு மற்றும் தொழிற் சங்கங்கள் சார்பாக வருகின்ற 16 மற்றும் 17 ஆம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தொழில் கூட்டமைப்பிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சி வர்த்தக பிரிவு திருப்பூர் மாவட்ட தலைவர் பாபு தொழில் கூட்டமைப்பு சார்பில் நடத்த உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.



மேலும், மத்திய அரசு உடனடியாக நூல் விலை ஏற்றத்தை கவனத்தில் கொண்டு பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை நிறுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வழி வகை செய்ய வேண்டும், நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தது போல டிரா பேக் டியூட்டி வழங்க வேண்டும்.

மேலும், காட்டனுக்கு மாற்று ஏற்பாடாக பாலிஸ்டர் துணி வகைகளை உற்பத்தி செய்ய சலுகைகள் வழங்குவதோடு அவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும், அதன் மூலம் பருத்தி விலை குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனவும் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை தயாரிப்பதற்கான சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...