பிரச்சினைக்கு தீர்வு காண உதவிய 'சிம்ப்ளிசிட்டி', மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்து நகர் குடியிருப்போர் நல சங்கம் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
கோவை: கோவை விளாங்குறிச்சி ரோடு இந்து நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் காணப்பட்டது.
இதுகுறித்த செய்தி படத்துடன் 'சிம்ப்ளிசிட்டி' ஆன்லைன் செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு மின்வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு மற்றும் அவரது குழுவினர் மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணி மேற்கொள்ள உதவினர்.
பிரச்சினைக்கு தீர்வு காண உதவிய 'சிம்ப்ளிசிட்டி', மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட அனைவருக்கும் விஐபி மற்றும் இந்து நகர் குடியிருப்போர் நல சங்கம் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.