தமிழக ஆளுநருக்கு எதிராக கோவையில் போஸ்டர்கள் ஒட்டிய 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு..!

தமிழக ஆளுநருக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.


கோவை: தமிழக ஆளுநருக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

கோவையில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 37 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள, நேற்று கோவை வந்தடைந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டுமென தமிழக ஆளுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை வந்துள்ள ஆளுநருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் அவரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.



அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் "பாப்புலர் ஃப்ரெண்ட் குறித்து அவதூறாக பேசிய தமிழக ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுநரே அவதூறு குற்றச்சாட்டை உடனடியாக திரும்ப பெறு. ஆர்.எஸ்.எஸ் க்கு ஆதரவாக மக்கள் இயக்கங்கள் மீது வன்மத்தை காட்டாதே. ஒன்றிய அரசே தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை உடனடியாக திரும்பப் பெறு" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.



பல்வேறு இடங்கள் ஒட்டப்பட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய போஸ்டர்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...