கோவையில் மாடியில் இருந்து விழுந்த வட மாநில தொழிலாளி உயிரிழப்பு - காரணம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை…!

மது போதையில் அவர் தவறி விழுந்திருக்கலாம் என சக தொழிலாளிகள் தெரிவித்த நிலையில், பிரதீப மாலிக் தவறி விழுந்தரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் பேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை பேரூர் பச்சாபாளையம் அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளி மாடியில் இருந்து விழுந்து பலியான நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், கட்டிட ஒப்பந்ததாரர். இவரிடம், வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் உள்ள வீட்டில் மேல் மாடியில் வாடகைக்கு தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் மது அருந்தியதாக தெரிகிறது. இதையடுத்து, அனைவரும் உறங்கச் சென்றுள்ளனர். பின்னர், மறுநாள் காலை வெளியே வந்து பார்த்த போது, அறையில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதீப மாலிக் (31) என்பவர் தரை தளத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பேரூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வட மாநில தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அறையில் இருந்த சக தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், மது போதையில் அவர் தவறி விழுந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்த நிலையில், பிரதீப மாலிக் தவறி விழுந்தரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...