வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த கோழி கூட்டில் கால் சிக்கிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சிறுத்தை, உயிரிழப்பு குறித்து வனத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை வரட்டுப்பாறை எஸ்டேட் அருகே உள்ள வருவாய் நிலத்தில் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தேனீர் கடைக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த கோழி கூட்டில் கால் சிக்கிய நிலையில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை காலை 7 மணிக்கு பார்த்துள்ளனர்.

இது குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை இறந்து கிடந்ததை முதலில் புகைப்படம் எடுத்தனர்.

இதையடுத்து அங்கிருந்த ஆதாரங்களை பதிவு செய்தனர். பின்னர் வனத்துறையின் கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளித்தனர்.
மின்சாரம் தாக்கி சிறுத்தை உயிரிழந்தா? அல்லது விஷம் ஏதேனும் வைக்கப்பட்டதா? சிறுத்தை உயிரிழப்பு குறித்து வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை வரட்டுப்பாறை எஸ்டேட் அருகே உள்ள வருவாய் நிலத்தில் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தேனீர் கடைக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த கோழி கூட்டில் கால் சிக்கிய நிலையில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை காலை 7 மணிக்கு பார்த்துள்ளனர்.
இது குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை இறந்து கிடந்ததை முதலில் புகைப்படம் எடுத்தனர்.
இதையடுத்து அங்கிருந்த ஆதாரங்களை பதிவு செய்தனர். பின்னர் வனத்துறையின் கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளித்தனர்.
மின்சாரம் தாக்கி சிறுத்தை உயிரிழந்தா? அல்லது விஷம் ஏதேனும் வைக்கப்பட்டதா? சிறுத்தை உயிரிழப்பு குறித்து வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.