கோவை வால்பாறை அருகே ஆண் சிறுத்தை சடலம் - மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பா? வனத்துறை தீவிர விசாரணை…!

வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த கோழி கூட்டில் கால் சிக்கிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சிறுத்தை, உயிரிழப்பு குறித்து வனத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை வரட்டுப்பாறை எஸ்டேட் அருகே உள்ள வருவாய் நிலத்தில் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தேனீர் கடைக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த கோழி கூட்டில் கால் சிக்கிய நிலையில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை காலை 7 மணிக்கு பார்த்துள்ளனர்.



இது குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை இறந்து கிடந்ததை முதலில் புகைப்படம் எடுத்தனர்.



இதையடுத்து அங்கிருந்த ஆதாரங்களை பதிவு செய்தனர். பின்னர் வனத்துறையின் கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளித்தனர்.

மின்சாரம் தாக்கி சிறுத்தை உயிரிழந்தா? அல்லது விஷம் ஏதேனும் வைக்கப்பட்டதா? சிறுத்தை உயிரிழப்பு குறித்து வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...