இலங்கை அகதிகள் முகாமில் குடும்ப தகராறில் இரண்டு பேர் கத்தியால் குத்திக் கொண்ட விவகாரம் தொடர்பாக இருவர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை ஆலாந்துறை இலங்கை அகதிகள் முகாமில் குடும்ப தகராறில் இருவருக்கு கத்தி குத்து ஏற்பட்ட நிலையில் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை ஆலாந்துறை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கிருஷ்ண பிரகாஷ்(32). கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் பெட்ரோல் பங்க் ஊழியர் மெட்டிலா ஜெயராணி என்ற திருமண பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து ஜெயராணியின் கணவர் அந்தோனி பிரசாத்துக்கு தெரிந்ததால், அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கடந்த ஒரு ஆண்டாக ஜெயராணி, கிருஷ்ண பிரகாஷுடன் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கிருஷ்ண பிரகாஷ் ஜெயராணியை தன்னுடன் பேச வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஜெயராணி தனது கணவர் மற்றும் அண்ணன் ஐவன் ஆகியோருடன் சென்று ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தனர்.

காவல் நிலையத்தில் புகாரளித்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ண பிரகாஷ் மது போதையில் வந்து ஜெய ராணியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்து, ஜெயராணியின் அண்ணன் ஐவன் என்பவரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதையடுத்து, அதே கத்தியை பிடிங்கி ஐவன், கிருஷ்ண பிரகாஷை குத்தியுள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக கிருஷ்ண பிரகாஷ் மற்றும் ஐவன் ஆகிய இருவர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ஆலாந்துறை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கிருஷ்ண பிரகாஷ்(32). கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் பெட்ரோல் பங்க் ஊழியர் மெட்டிலா ஜெயராணி என்ற திருமண பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து ஜெயராணியின் கணவர் அந்தோனி பிரசாத்துக்கு தெரிந்ததால், அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கடந்த ஒரு ஆண்டாக ஜெயராணி, கிருஷ்ண பிரகாஷுடன் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கிருஷ்ண பிரகாஷ் ஜெயராணியை தன்னுடன் பேச வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஜெயராணி தனது கணவர் மற்றும் அண்ணன் ஐவன் ஆகியோருடன் சென்று ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தனர்.
காவல் நிலையத்தில் புகாரளித்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ண பிரகாஷ் மது போதையில் வந்து ஜெய ராணியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்து, ஜெயராணியின் அண்ணன் ஐவன் என்பவரை கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து, அதே கத்தியை பிடிங்கி ஐவன், கிருஷ்ண பிரகாஷை குத்தியுள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக கிருஷ்ண பிரகாஷ் மற்றும் ஐவன் ஆகிய இருவர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.