தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் செல்வதாக அப்பகுதிவாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45-வது வார்டு சுகுமார் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வசித்து வரக்கூடிய சூழ் நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலையில் சென்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சுகுமார் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக அமைக்கப்படாததால் காரணமாகக் கழிவுநீர் வீடுகளுக்குச் சென்று துர்நாற்றம் வீசக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45-வது வார்டு சுகுமார் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வசித்து வரக்கூடிய சூழ் நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலையில் சென்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுகுமார் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக அமைக்கப்படாததால் காரணமாகக் கழிவுநீர் வீடுகளுக்குச் சென்று துர்நாற்றம் வீசக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.