கோவையில் வீட்டில் இருந்த 14-சவரன் நகைகளை திருடிய பணிப்பெண் கைது..!

14-சவரன் நகைகளை மீட்டு, பணிப்பெண்னை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.


கோவை:கோவையில் வீட்டில் இருந்த 14-சவரன் நகைகளை திருடிய பணிப்பெண்னை போலீசார் கைது செய்தனர்.

கோவை கிணத்துக்கடவு காட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிரி கதிர்வேல் (54) விவசாயி. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் இரவு வந்து பார்த்தபோது வீட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் 14 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. ஆனால் வீடு பூட்டிய நிலையிலேயே இருந்த போது நகைகள் மாயமானதால், சந்தேகமடைந்த கிரி கதிர்வேல் நெகமம் போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களது வீட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்ந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி (32) என்பவர் போலீசார் அழைத்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கிரி கதிர்வேல் உள்ளிட்டோர் வெளியே சென்ற, பிறகு வீட்டின் அருகே வைத்திருந்த வீட்டு சாவியை எடுத்து உள்ளே புகுந்து 14-சவரன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அவரிடம் இருந்த 14 சவரன் நகைகளை மீட்டு, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ரேவதி நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...