14-சவரன் நகைகளை மீட்டு, பணிப்பெண்னை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கோவை:கோவையில் வீட்டில் இருந்த 14-சவரன் நகைகளை திருடிய பணிப்பெண்னை போலீசார் கைது செய்தனர்.
கோவை கிணத்துக்கடவு காட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிரி கதிர்வேல் (54) விவசாயி. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் இரவு வந்து பார்த்தபோது வீட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் 14 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. ஆனால் வீடு பூட்டிய நிலையிலேயே இருந்த போது நகைகள் மாயமானதால், சந்தேகமடைந்த கிரி கதிர்வேல் நெகமம் போலீசில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களது வீட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்ந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி (32) என்பவர் போலீசார் அழைத்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கிரி கதிர்வேல் உள்ளிட்டோர் வெளியே சென்ற, பிறகு வீட்டின் அருகே வைத்திருந்த வீட்டு சாவியை எடுத்து உள்ளே புகுந்து 14-சவரன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அவரிடம் இருந்த 14 சவரன் நகைகளை மீட்டு, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ரேவதி நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கோவை கிணத்துக்கடவு காட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிரி கதிர்வேல் (54) விவசாயி. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் இரவு வந்து பார்த்தபோது வீட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் 14 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. ஆனால் வீடு பூட்டிய நிலையிலேயே இருந்த போது நகைகள் மாயமானதால், சந்தேகமடைந்த கிரி கதிர்வேல் நெகமம் போலீசில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களது வீட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்ந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி (32) என்பவர் போலீசார் அழைத்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கிரி கதிர்வேல் உள்ளிட்டோர் வெளியே சென்ற, பிறகு வீட்டின் அருகே வைத்திருந்த வீட்டு சாவியை எடுத்து உள்ளே புகுந்து 14-சவரன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அவரிடம் இருந்த 14 சவரன் நகைகளை மீட்டு, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ரேவதி நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.