கோவை தடாகம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு பன்றி குறுக்கே வந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை: வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு பன்றி குறுக்கே வந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போதுதிருவள்ளுவர் நகரை அடுத்த நர்சரி பகுதியில் வந்த போது, வனப்பகுதியில் இருந்துகாட்டு பன்றி ஒன்று கீழே இறங்கிச் சாலையைக் கடந்து உள்ளது.
அப்போது இருசக்கர வாகனத்தை நிறுத்த முடியாமல் சென்ற நிலையில் காட்டுப்பன்றி இருசக்கர வாகனத்தின் மீது உரசி சென்றுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் தடாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார்நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.