நள்ளிரவு 2 மணிக்கு வேலந்தாவளம் அருகே உள்ள வழுக்கல் வளைவு அருகே வந்த போது, எதிரே சூலூரில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற ஆடுகள் மீது மோதியது.
கோவை: கோவை சூலூர் கலங்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனக்கு சொந்தமாக 400ஆடுகளைகேரளாவில் இருந்து நாகராஜ், ஆறுமுகம், முத்து ஆகிய மூன்று பேர் மூலம் கோவை சூலூர் நோக்கி சாலையில் வழியாக மேய்து வந்துள்ளனர்.
அப்போது, வேலந்தாவளம் அருகே உள்ள வழுக்கல் வளைவு அருகே நள்ளிரவு 2 மணிக்கு வந்த போது,எதிரே சூலூரில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற ஆடுகள் மீது மோதியது.

இந்த விபத்தில் 43 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. 15 ஆடுகள்காயமடைந்துள்ளது. மற்ற ஆடுகள் பயந்து சாலை அருகே இருந்த காட்டுக்குள் இறங்கியது. இந்த விபத்தில் ஆடுகளை ஓட்டி வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை.

விபத்து தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரான கேரளா மாநிலம் ஒத்தப்பாலத்தை சேர்ந்த முகமது ரம்மி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது, வேலந்தாவளம் அருகே உள்ள வழுக்கல் வளைவு அருகே நள்ளிரவு 2 மணிக்கு வந்த போது,எதிரே சூலூரில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற ஆடுகள் மீது மோதியது.
இந்த விபத்தில் 43 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. 15 ஆடுகள்காயமடைந்துள்ளது. மற்ற ஆடுகள் பயந்து சாலை அருகே இருந்த காட்டுக்குள் இறங்கியது. இந்த விபத்தில் ஆடுகளை ஓட்டி வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை.
விபத்து தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரான கேரளா மாநிலம் ஒத்தப்பாலத்தை சேர்ந்த முகமது ரம்மி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.