கோவையில் ரயில் மோதி இளைஞர் பலி - தற்கொலை? விபத்தா? ரயில்வே போலீஸ் விசாரணை…!

கோவை போத்தனூர் - மதுக்கரை இடையே ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை போத்தனூர் - மதுக்கரை இடையே ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த போத்தனூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்து கிடந்த அந்த இளைஞருக்கு சுமார் 25 வயது இருக்கும் எனவும், சிவப்பு நிறத்தில் டி-சர்ட் அணிந்திருந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த வாலிபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை தண்டவாளத்தை கடக்கும் போது விபத்தா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...