கோவை போத்தனூர் - மதுக்கரை இடையே ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை போத்தனூர் - மதுக்கரை இடையே ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த போத்தனூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்து கிடந்த அந்த இளைஞருக்கு சுமார் 25 வயது இருக்கும் எனவும், சிவப்பு நிறத்தில் டி-சர்ட் அணிந்திருந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த வாலிபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை தண்டவாளத்தை கடக்கும் போது விபத்தா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த போத்தனூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்து கிடந்த அந்த இளைஞருக்கு சுமார் 25 வயது இருக்கும் எனவும், சிவப்பு நிறத்தில் டி-சர்ட் அணிந்திருந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த வாலிபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை தண்டவாளத்தை கடக்கும் போது விபத்தா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.