'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கோவை மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர்

கோவை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று சுகாதாரக்குழு கூட்டம், தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.



அப்போது கூட்டத்தில் பேசிய அவர், கோவை மாநகரில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி உள்ளது. தூய்மை பணியாளர்களின் சிரமங்களை கேட்டறிந்து தூய்மை பணிகளை வேகப்படுத்த வேண்டும். மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தினமும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதே போல, ஏதாவது ஒரு வார்டில் தினமும் "மாஸ் கிளீனிங்" நடத்தப்பட வேண்டும். பழுதடைந்த குப்பை தொட்டிகளை அகற்றி விட்டு புதிய குப்பைத் தொட்டிகளை வாங்க வேண்டும். மேலும், அடிக்கடி பழுதடையும் வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்க வேண்டும். கட்டிட கழிவுகளில் இருந்து மறுசுழற்சி பொருட்கள் தயாரிப்பதற்கான மையம் கட்ட வேண்டும்.

தமிழக முதல்வர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மாநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுகளை ஒழிக்க வேண்டும். "மீண்டும் மஞ்சப்பை" திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



இக்கூட்டத்தில், மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார், சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...