கோவையில் அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவம்: காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தர்ணா; மக்கள் அவதி

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து ஓட்டுனர், அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியதால், 50 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படாமல், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் ப‌ர‌ப‌ர‌ப்பு நிலவியது.



கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து ஓட்டுனர், அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியதால், 50 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படாமல், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் ப‌ர‌ப‌ர‌ப்பு நிலவியது.



மேலும், மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்புவோர் பேருந்துகள் இயக்கப்படாததால் கடும் அவதியடைந்தனர்.

உக்கடத்தில் இருந்து வெள்ளமடை வரை சென்று வரும் எண் 45 கொண்ட தனியார் பேருந்து, இன்று மாலை காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையத்திற்குள் செல்லும் போது, 3H என்ற எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் வழி விடவில்லை என கூறப்படுகிறது.



இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, தனியார் பேருந்து ஓட்டுனர் சந்தோஷ் மற்றும் நடத்துநர் வெங்கடேஷ் அரசு பேருந்து ஓட்டுநர் கார்த்திகை சரமாரியாக தாக்கியுள்ளனர்.



இந்த சம்பவத்தை கண்டித்து காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் நடத்தின‌ர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.



இதையடுத்து, பேச்சுவார்த்தையில் உட‌ன்பாடு ஏற்பட்டதால், 2 மணி நேரத்துக்கும் மேல் தர்ணாவில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீண்டும் பேருந்துகளை இயக்கின‌ர்.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காட்டூர் போலீசார், அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் இரு நடத்துனர்கள் மீது IPC 294(b), 323, 332 and 506(i) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

காயமடைந்த, அரசு பேருந்து ஓட்டுனர் கார்த்திக் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



தாக்குதல் மற்றும் தர்ணா சம்பவத்தால், காந்திபுர‌ம் பேருந்து நிலைய‌ம் ம‌ற்றும் சுற்றி உள்ள‌ அனைத்து ப‌குதியிலும் கடும் பேக்குவ‌ர‌த்து நெரிச‌ல் ஏற்ப‌ட்ட‌து.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...