கோவையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொடூர கொலை வழக்கு: மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கொலை செய்த வழக்கில், நேற்று ஒரு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று மற்றொருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


கோவை: கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடன் எம்.ஜி.ராஜன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொழில் தேவைக்காக பொன்னுச்சாமி, ராஜனிடம் கடனாக ரூ.50 லட்சம் வாங்கியுள்ளார். அதற்கு வட்டியுடன் ரூ.3 கோடி திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், அவர் திரும்ப தர தாமதமானதால் இவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், துடியலூர் அருகே உள்ள பொன்னுச்சாமிக்கு சொந்தமான இடத்தை வாங்க ஒருவர் வந்ததாக கூறி அவரை அழைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த பொன்னுசாமியை, ராஜன் மற்றும் முத்துக்குமார் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இந்த வழக்கில், இருவரையும் துடியலூர் போலீசார் கைது செய்த நிலையில், கொடூரமாக கொலை செய்து சிறையில் உள்ள ராஜனை நேற்று குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.



இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில் அசோக் குமார் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கியுள்ளார்.

பொன்னுச்சாமி கொலை வழக்கில் தொடர்புடைய ராஜன், அசோக்குமார் இருவரும், தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...