உலக தலசீமியா தினத்தையொட்டி, கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை நலத்துறை சார்பாக 9.5.2022 அன்று கருவுற்ற தாய்மார்களுக்கு தலசீமியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக தலசீமியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உலக தலசீமியா தினம் 8.5.2022 அன்று கொண்டாடப்படுகிறது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைக் நலத்துறை சார்பாக 9.5.2022 அன்று கருவுற்ற தாய்மார்களுக்கு தலசீமியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இது DEIC (மாவட்ட இடையீட்டு மையம்) சார்பாக நடைபெற்றது. 10.05.2022 அன்று சென்னை Rela மருத்துவமனை எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை நிபுணர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பங்கேற்று தலசீமியா குழந்தைகளின் பெற்றோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து தலசீமியா குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Rela மருத்துவமனை நிபுணர் தீனதயாளன் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு Bone Marrow Transplantation பற்றி கருத்தரங்கு நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இம்மருத்துவமனை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், முதுநிலை பயிற்சி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உலக தலசீமியா தினம் 8.5.2022 அன்று கொண்டாடப்படுகிறது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைக் நலத்துறை சார்பாக 9.5.2022 அன்று கருவுற்ற தாய்மார்களுக்கு தலசீமியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இது DEIC (மாவட்ட இடையீட்டு மையம்) சார்பாக நடைபெற்றது. 10.05.2022 அன்று சென்னை Rela மருத்துவமனை எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை நிபுணர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பங்கேற்று தலசீமியா குழந்தைகளின் பெற்றோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து தலசீமியா குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
Rela மருத்துவமனை நிபுணர் தீனதயாளன் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு Bone Marrow Transplantation பற்றி கருத்தரங்கு நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இம்மருத்துவமனை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், முதுநிலை பயிற்சி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.