போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு சங்க அண்ணா தொழிற்சங்க செயலாளர் அருள்சாமி தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்ற தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:-
திமுக அரசு அண்ணா தொழிற்சங்கத்தினரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சு.குணசேகரன், திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் தங்கவேல், தலைவர் ரவீந்திரன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு சங்க அண்ணா தொழிற்சங்க செயலாளர் அருள்சாமி தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்ற தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:-
திமுக அரசு அண்ணா தொழிற்சங்கத்தினரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சு.குணசேகரன், திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் தங்கவேல், தலைவர் ரவீந்திரன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.