மக்களோடு சேர்ந்து மக்களுக்கு பணி செய்ய எங்களுக்கு பிரதமர் ஊக்கமளிக்கிறார் - கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோவை அவினாசி சாலையிலுள்ள ஜி.டி அரங்கத்தில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் "அமுதம்" திட்டத்தை மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை அவினாசி சாலையிலுள்ள ஜி.டி அரங்கத்தில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் "அமுதம்" திட்டத்தை மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.



துவக்க விழாவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "கோவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ, வானதி சீனிவாசன், தொடர்ந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையானதை செய்து வருகிறார். பெண்களின், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்படுகிறார்.

மக்களோடு சேர்ந்து மக்களுக்கு பணி செய்ய எங்களுக்கு பிரதமர் ஊக்கமளிக்கிறார். அதன் தொடர்ச்சியாக, ஏழை குடும்பத்தை சேர்ந்த பால் ஊட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள், பால் கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக வானதி சீனிவாசன், "அமுதம்" என்ற இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார்" என்று புகழாரம் சூட்டினார்.

வரும் காலங்களில், தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையில் மக்கள் வாக்களித்து அதிக இடங்களில் பாஜகவை வெற்றிபெற வைக்க வேண்டும், என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.



இவ்விழாவில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பேசுகையில், பாஜாகவில் பெரிய பொறுப்பில் இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவதை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதி மக்கள் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர் என்றும் மாதம் 4 ஆயிரம் இளம்பெண்களுக்கு சானிட்டரி பேட் இலவசமாக வழங்கி வருகிறோம். நம் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும், ஊட்டச்சத்தை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது, என்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும், இன்று அறிமுகப்படுத்தியுள்ள "அமுதம்" திட்டம் மூலம், அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்பவர்களுக்கு மளிகை கடை மூலம் தினமும் 250 மில்லி பால் வழங்கப்படும், என்று கூறினார்.



"பொதுவாக, கொங்கு பகுதியில் மாட்டில் இருந்து பால் கறக்கும் போது, "குழந்தை பால்" என்று ஒரு பகுதியை பிரித்து வைக்கும் பழக்கம் உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "அமுதம்" திட்டம் அமைந்துள்ளது", என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

"எனக்கு பிடித்த இரண்டு பெண்மணிகள் மேடையில் இருக்கிறார்கள். ஒன்று வானதி சீனிவாசன், மற்றொருவர் நிர்மலா சீதாராமன். அண்மையில், நடத்தப்பட்ட கருத்துகணிப்பில், நிர்மலா சீதாராமன் 100 இரும்பு பெண்மணிகளில் 34 வது இடத்தை பிடித்துள்ளார்.

எப்போதும், நிமிர்ந்து நிற்கும் பெண்மணி நம் நிதி அமைச்சர்; பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தும் பெண்மணி நிர்மலா சீதாராமன்", என்று புகழாரம் சூட்டினார்.

இறுதியில், பாஜகவின் இரும்பு கோட்டையாக கோவை மாறும் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...