ஏற்கனவே, கோத்தகிரியில் வைத்து விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், மீண்டும் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் முதல் மறு விசாரணை நடந்து வருகிறது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த வழக்கில் ஐஜி சுதாகர் தலைமையில் மறுவிசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த மறுவிசாரணையில், முதல் முறையாக சசிகலா, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, சஜீவன், அவரது சகோதரர்கள், உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள சயானிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, அவரிடம் கோத்தகிரியில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது எழுத்துப்பூர்வமாக வாக்கு மூலம் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த வழக்கில் ஐஜி சுதாகர் தலைமையில் மறுவிசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த மறுவிசாரணையில், முதல் முறையாக சசிகலா, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, சஜீவன், அவரது சகோதரர்கள், உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள சயானிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, அவரிடம் கோத்தகிரியில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது எழுத்துப்பூர்வமாக வாக்கு மூலம் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.