கோடநாடு கொலை கொள்ளை வழக்கு - சயானிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் மீண்டும் விசாரணை..!

ஏற்கனவே, கோத்தகிரியில் வைத்து விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், மீண்டும் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் முதல் மறு விசாரணை நடந்து வருகிறது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த வழக்கில் ஐஜி சுதாகர் தலைமையில் மறுவிசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மறுவிசாரணையில், முதல் முறையாக சசிகலா, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, சஜீவன், அவரது சகோதரர்கள், உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள சயானிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, அவரிடம் கோத்தகிரியில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது எழுத்துப்பூர்வமாக வாக்கு மூலம் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...