கோவையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….!

பழைய ஓய்வூதியம், சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம் பெறுவோருக்கு நிரந்தர காலமுறை ஊதியம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



பழைய ஓய்வூதியம், சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம் பெறுவோருக்கு நிரந்தர காலமுறை ஊதியம், நியாய விலை கடை மற்றும் டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாறுதல்கள் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை பவர் ஹவுஸ் பகுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.



இதில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் நியாயவிலை கடை ஊழியர்கள் உட்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழக அரசு, அரசு பணியாளர்கள் கோரிக்கை குறித்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார். 18 ஆண்டுகளுக்கும் மேலாக பென்சன் திட்டம் போன்றவற்றிற்காக போராடி வருவதாக தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய பென்சன் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்தார். எனவே பழைய பென்ஷன் திட்டம் பென்சன் இல்லாத பணியாளர்களுக்கு பென்சன் திட்டம் வழங்க வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு நியாய விலைக் கடை, டாஸ்மாக் கடை பணியாளர்கள் கோரிக்கைகளுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். தங்களது கோரிக்கைகளுக்கு தமிழக உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து நாளை நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிவிக்க வேண்டுமென தெரிவித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் முழு நேரமும் பணியாற்றி வருவதால் அவர்களை பகுதி நேர பணியாளர்கள் என்பதை மாற்றி முழு நேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...