கோவையில் வெற்றிலை பாக்கு தட்டுடன் வந்த அருந்ததியர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: அரசு வழங்கிய நிலத்தை நூதன முறையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் அபகரித்தாக புகார் தெரிவித்து வெத்தலை பாக்கு தட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருந்ததியர் முன்னேற்ற கழகம் சார்பில் 80க்கு மேற்பட்டவர்கள் புகார் மனு அளிக்க வந்திருந்தனர். கையில் வெத்தலை, பாக்கு, தேங்காய் மற்றும் வாழைப்பழத்துடன் வந்த அவர்கள், சூலூர் அப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 31 அருந்ததியர் குடும்பத்தினரக்கு வழங்கப்பட்ட நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் அபகரித்தாக குற்றம்சாட்டினர்.
மேலும், படிப்பறிவு இல்லாத தங்களை ஏமாற்றிய சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து நூதன முறையில் மனு அளித்தனர்.