கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி அரசுப் பள்ளியில் 35 சிறுமிகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின்கீழ் அஞ்சல் துறை வங்கி சேமிப்பு கணக்குகள் துவக்கம்..!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மேயர் கல்பனா ஆனந்தகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கினார்.


கோவை: கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி அரசுப் பள்ளியில் 35 சிறுமிகளுக்காகத் துவக்கப்பட்ட அஞ்சல் துறை வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.



உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி அரசுப் பள்ளியில் 10 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் அஞ்சல் துறை சார்பில் வங்கி சேமிப்பு கணக்குகள் துவங்கப்பட்டு அதற்கான சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.



கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மொத்தம் 35 மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச் செல்வன், வார்டு உறுப்பினர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...