உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மேயர் கல்பனா ஆனந்தகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கினார்.
கோவை: கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி அரசுப் பள்ளியில் 35 சிறுமிகளுக்காகத் துவக்கப்பட்ட அஞ்சல் துறை வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி அரசுப் பள்ளியில் 10 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் அஞ்சல் துறை சார்பில் வங்கி சேமிப்பு கணக்குகள் துவங்கப்பட்டு அதற்கான சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மொத்தம் 35 மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச் செல்வன், வார்டு உறுப்பினர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி அரசுப் பள்ளியில் 10 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் அஞ்சல் துறை சார்பில் வங்கி சேமிப்பு கணக்குகள் துவங்கப்பட்டு அதற்கான சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மொத்தம் 35 மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச் செல்வன், வார்டு உறுப்பினர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.