கோவையில் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் காவலாளியின் மகள்..!

கோவையில் அரசுப் பள்ளிகளில் பயின்று விடாமுயற்சியுடன் தனது மருத்துவ கனவை நிறைவேற்றிய பெண்ணிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் காவலாளியின் மகள் பவதாரணி மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

கோவை சுந்தராபுரம் செங்கோட்டையன் அரசுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த பவதாரணி பத்தாம் வகுப்பில் 486 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, தனது பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் மருத்துவம் படிக்க 11 மற்றும் 12ம் வகுப்பில் முதல் குரூப்பினை தேர்வு செய்து எஸ்ஆர்கே அம்மணிஅம்மாள் அரசுப் பள்ளியில் தனது மேல்நிலை கல்வியைத் தொடங்கினார். தனது மேல்நிலைப் பள்ளியில் தேர்வின் முடிவில் 600க்கு 404க்கு மதிபெண்கள் பெற்று நீட் தேர்வு எழுத தயாராகினார்.

பொள்ளாச்சியில் அரசு நடத்திய இலவச நீட் பயிற்சி வகுப்பில் கற்றுத் தேர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் 180 மதிப்பெண்களே எடுத்து தோல்வியைத் தழுவிய நிலையில் மூன்றாவது முறையாக தற்பொழுது மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

ரப்பொர் (RAPPOR) அமைப்பின் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் நடத்தி நேர்முகத் தேர்வின் மூலம் 5 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மருத்துவம் படிக்க பயிற்சி வகுப்புக்கு வாய்ப்பு அளித்துள்ளனர்.

இதையடுத்து, தனது மருத்துவ கல்விக்கான கனவினை நிறைவேற்ற ஈரோடு நந்து ஆயுர்வேத கல்லூரியில் தற்போது படிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...