ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழாவை கலைக் குழுவின் தலைவர் சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார். சிறப்பு அழைப்பாளராக, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
கோவை: கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவில், வண்ண கோலமிட்ட மைதானத்தில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து ஒயிலாட்டம் ஆடினர்.

தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் ஒன்றான ஒயிலாட்டத்தை இளம் தலைமுறையினர் தற்போது ஆர்வமாக கற்று வருகின்றனர். இக்கலையை, கோவை உட்பட கிராமந்தோறும் கொண்டு சேர்க்கும் வகையில், சரவணம்பட்டி, சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் 5 வயது குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று பயிற்சி பெற்ற ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது.

திறந்த வெளி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவை, கலைக்குழுவின் தலைவர் சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார். சிறப்பு அழைப்பாளராக சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கணபதி, அன்னூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், உள்ள ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு வண்ண கோலமிட்ட மைதானத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய கலை பயிற்சி பெற்றவர்கள் இணைந்து கலைக்குழுவின் ஆசிரியர்கள் நவீன் குமார் ஜெகநாதன், பிரகாஷ் ஆறுச்சாமி, ஆகியோர் ஒருங்கிணைப்பில் செல்வம் குழுவினரின் பம்பை இசை முழங்க, கூடி நின்று ஒயிலாட்டமாடினர்.

கிராமிய கலை குறித்து ஒயிலாட்டம் ஆடி, இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல்கள் பம்பை இசையுடன், முளைப்பாரி, ஒயிலாட்ட சீர் வரிசையுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை, உற்சாகமாக நடனமாடி திறமைகளை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் ஒன்றான ஒயிலாட்டத்தை இளம் தலைமுறையினர் தற்போது ஆர்வமாக கற்று வருகின்றனர். இக்கலையை, கோவை உட்பட கிராமந்தோறும் கொண்டு சேர்க்கும் வகையில், சரவணம்பட்டி, சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் 5 வயது குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகின்றனர்.
அதன்படி, இன்று பயிற்சி பெற்ற ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது.
திறந்த வெளி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவை, கலைக்குழுவின் தலைவர் சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார். சிறப்பு அழைப்பாளராக சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கணபதி, அன்னூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், உள்ள ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு வண்ண கோலமிட்ட மைதானத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய கலை பயிற்சி பெற்றவர்கள் இணைந்து கலைக்குழுவின் ஆசிரியர்கள் நவீன் குமார் ஜெகநாதன், பிரகாஷ் ஆறுச்சாமி, ஆகியோர் ஒருங்கிணைப்பில் செல்வம் குழுவினரின் பம்பை இசை முழங்க, கூடி நின்று ஒயிலாட்டமாடினர்.
கிராமிய கலை குறித்து ஒயிலாட்டம் ஆடி, இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல்கள் பம்பை இசையுடன், முளைப்பாரி, ஒயிலாட்ட சீர் வரிசையுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை, உற்சாகமாக நடனமாடி திறமைகளை வெளிப்படுத்தினர்.