கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழா: சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை ஒயிலாட்டம் ஆடி அசத்தல்..!

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழாவை கலைக் குழுவின் தலைவர் சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார். சிறப்பு அழைப்பாளராக, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.


கோவை: கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவில், வண்ண கோலமிட்ட மைதானத்தில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து ஒயிலாட்டம் ஆடினர்.



தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் ஒன்றான ஒயிலாட்டத்தை இளம் தலைமுறையினர் தற்போது ஆர்வமாக கற்று வருகின்றனர். இக்கலையை, கோவை உட்பட கிராமந்தோறும் கொண்டு சேர்க்கும் வகையில், சரவணம்பட்டி, சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் 5 வயது குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகின்றனர்.



அதன்படி, இன்று பயிற்சி பெற்ற ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது.



திறந்த வெளி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவை, கலைக்குழுவின் தலைவர் சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார். சிறப்பு அழைப்பாளராக சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கணபதி, அன்னூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், உள்ள ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு வண்ண கோலமிட்ட மைதானத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய கலை பயிற்சி பெற்றவர்கள் இணைந்து கலைக்குழுவின் ஆசிரியர்கள் நவீன் குமார் ஜெகநாதன், பிரகாஷ் ஆறுச்சாமி, ஆகியோர் ஒருங்கிணைப்பில் செல்வம் குழுவினரின் பம்பை இசை முழங்க, கூடி நின்று ஒயிலாட்டமாடினர்.



கிராமிய கலை குறித்து ஒயிலாட்டம் ஆடி, இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல்கள் பம்பை இசையுடன், முளைப்பாரி, ஒயிலாட்ட சீர் வரிசையுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை, உற்சாகமாக நடனமாடி திறமைகளை வெளிப்படுத்தினர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...