திருப்பூரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் அலுவலகம் சீர் செய்யும் பணி துவக்கம்..!

வரும் 2ம் தேதி மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழாவும், 4ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.



திருப்பூர்: திருப்பூரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் அலுவலகம் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளுக்கான மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்த 2011 முதல் 2016 வரை மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்று வந்த நிலையில், 2016க்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் மாமன்ற கூட்ட அரங்கு மற்றும் மேயர் அலுவலகம் செயல்படாமல் இருந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து 60 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 2ம் தேதி அவர்களுக்கான பதவி ஏற்பு விழாவும், 4ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற இருக்கிறது.



அதன் பின்பு, மாதந்தோறும் மாமன்றக் கூட்டம் நடைபெற உள்ள சூழ்நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் அலுவலகம் சீர் செய்யும் பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...