காமராஜபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அங்குள்ள இஸ்திரி கடைக்கு சென்று துணிகளுக்கு இஸ்திரி போட்டு கொடுத்து வாக்குகளை சேகரித்தார். அப்பகுதி மக்களுடன் பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார்.
கோவை: கோவை காமராஜபுரத்தில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அங்குள்ள ஒரு இஸ்திரி கடையில், துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்தார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை கவர்ந்து வாக்குகளை பெற பல்வேறு புதிய உக்திகளை வகுத்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை,கோவை மாநகராட்சி பகுதிகளான ஆவாரம்பாளையம் மற்றும் காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் பா.ஜ.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பிற்படுத்தப்பட்டமக்கள் அதிகம் வாழும் காமராஜபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அங்குள்ள இஸ்திரி கடைக்கு சென்று துணிகளுக்கு இஸ்திரி போட்டுகொடுத்து ஆதரவு கோரினார்.

அப்பகுதி மக்களுடன் பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார்.பின்னர், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருவதாக அப்பகுதி மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை கவர்ந்து வாக்குகளை பெற பல்வேறு புதிய உக்திகளை வகுத்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை,கோவை மாநகராட்சி பகுதிகளான ஆவாரம்பாளையம் மற்றும் காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் பா.ஜ.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பிற்படுத்தப்பட்டமக்கள் அதிகம் வாழும் காமராஜபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அங்குள்ள இஸ்திரி கடைக்கு சென்று துணிகளுக்கு இஸ்திரி போட்டுகொடுத்து ஆதரவு கோரினார்.
அப்பகுதி மக்களுடன் பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார்.பின்னர், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருவதாக அப்பகுதி மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்.