கோவை மாவட்ட ஆணையாளரிடம் இன்று சமூக நீதி கட்சி மனு

கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக பணியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களைத் தேர்தல் பணியிலிருந்து ரத்து செய்ய வேண்டும் என்று சமூக நீதி கட்சி கோவை மாவட்ட ஆணையாளரிடம் இன்று மனு அளித்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக பணியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களைத் தேர்தல் பணியிலிருந்து ரத்து செய்ய வேண்டும் என்று சமூக நீதி கட்சி கோவை மாவட்ட ஆணையாளரிடம் இன்று மனு அளித்துள்ளது.

அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரே இரவில் 54 இளநிலை உதவியாளர்கள் என அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களுக்குச் சட்டவிரோதமாக இளநிலை உதவியாளர் என்ற பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கிய பணியை ரத்து செய்யக்கோரி கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஈஸ்வரி தொடர்ந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த 54 இளநிலை உதவியாளர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வேலை செய்ய வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இவர்களது வேலையை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இவர்களுக்குத் தேர்தலில் முக்கிய பணிகளான வாக்குச்சீட்டு கொடுத்தல், தபால் ஓட்டுக்களைச் சரிபார்த்தல், EVM மிஷினை கண்காணித்தல் போன்ற பணிகள் ஒதுக்கபட்டுள்ளன.

ஆகவே, உடனடியாக அதிமுக சட்டவிரோதமாகப் பணி நியமனம் செய்த 54 இளநிலை உதவியாளர்களின் தேர்தல் பணிகளை ரத்து செய்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு சமூக நீதிக் கட்சி மனு அளித்துள்ளனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...