கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக பணியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களைத் தேர்தல் பணியிலிருந்து ரத்து செய்ய வேண்டும் என்று சமூக நீதி கட்சி கோவை மாவட்ட ஆணையாளரிடம் இன்று மனு அளித்துள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக பணியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களைத் தேர்தல் பணியிலிருந்து ரத்து செய்ய வேண்டும் என்று சமூக நீதி கட்சி கோவை மாவட்ட ஆணையாளரிடம் இன்று மனு அளித்துள்ளது.
அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரே இரவில் 54 இளநிலை உதவியாளர்கள் என அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களுக்குச் சட்டவிரோதமாக இளநிலை உதவியாளர் என்ற பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கிய பணியை ரத்து செய்யக்கோரி கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஈஸ்வரி தொடர்ந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த 54 இளநிலை உதவியாளர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வேலை செய்ய வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இவர்களது வேலையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், இவர்களுக்குத் தேர்தலில் முக்கிய பணிகளான வாக்குச்சீட்டு கொடுத்தல், தபால் ஓட்டுக்களைச் சரிபார்த்தல், EVM மிஷினை கண்காணித்தல் போன்ற பணிகள் ஒதுக்கபட்டுள்ளன.
ஆகவே, உடனடியாக அதிமுக சட்டவிரோதமாகப் பணி நியமனம் செய்த 54 இளநிலை உதவியாளர்களின் தேர்தல் பணிகளை ரத்து செய்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு சமூக நீதிக் கட்சி மனு அளித்துள்ளனர்.
அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரே இரவில் 54 இளநிலை உதவியாளர்கள் என அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களுக்குச் சட்டவிரோதமாக இளநிலை உதவியாளர் என்ற பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கிய பணியை ரத்து செய்யக்கோரி கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஈஸ்வரி தொடர்ந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த 54 இளநிலை உதவியாளர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வேலை செய்ய வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இவர்களது வேலையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், இவர்களுக்குத் தேர்தலில் முக்கிய பணிகளான வாக்குச்சீட்டு கொடுத்தல், தபால் ஓட்டுக்களைச் சரிபார்த்தல், EVM மிஷினை கண்காணித்தல் போன்ற பணிகள் ஒதுக்கபட்டுள்ளன.
ஆகவே, உடனடியாக அதிமுக சட்டவிரோதமாகப் பணி நியமனம் செய்த 54 இளநிலை உதவியாளர்களின் தேர்தல் பணிகளை ரத்து செய்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு சமூக நீதிக் கட்சி மனு அளித்துள்ளனர்.