பொள்ளாச்சி அருகே கூலி தொழிலாளியை கட்டையால் தாக்கி கொன்றவர் கைது

பொள்ளாச்சி அருகே மது அருந்தச் சென்ற இடத்தில், இருவருக்கும் ஏற்பட்ட தகராற்றில், கூலி தொழிலாளியைக் கட்டையால் தாக்கி கொன்றவர் கைது செய்யப்பட்டார்.


கோவை: பொள்ளாச்சி அருகே மது அருந்தச் சென்ற இடத்தில், இருவருக்கும் ஏற்பட்ட தகராற்றில், கூலி தொழிலாளியைக் கட்டையால் தாக்கி கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (34), தேங்காய் உறிக்கும் தொழிலாளி. இவர் கடந்த 5-ம் தேதி திவான்சாபுதூர் அருகே தனியார் தோட்டத்தில் தேங்காய் உறிக்கும் பணிக்குச் சென்றார்.

இந்நிலையில், பணியை முடித்த பிறகு இரவு அதே தோட்டத்தில் பணிக்கு வந்த உடுமலையைச் சேர்ந்த செல்வராஜ் (40) என்பவருடன் மது அருந்தச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு இருவருக்கும் ஏற்பட்டதகராற்றில், செல்வராஜ் மகாலிங்கத்தைக் கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாகத் தெரிகிறது. இதில், மகாலிங்கம் உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆனைமலை போலீசார் தப்பி ஓடிய செல்வராஜை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆலங்கடவு அருகே வைத்து செல்வராஜை நேற்று போலீசார் கைது செய்தனர். பின், விசாரணையில் குடி போதையிலிருந்த போது மகாலிங்கம் செல்வராஜை தள்ளி விட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகிலிருந்த கட்டையை எடுத்து மகாலிங்கத்தைத் தாக்கியதில், அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து செல்வராஜ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...