பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்றது.
கோவை: கோவை பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக வேட்பாளர்களுக்கு A,B,C படிவங்கள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் செய்த சாதனைகளையும், சட்டமன்ற தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் பொய்ப் பிரச்சாரங்களையும் மக்களிடையே கொண்டு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்று பொள்ளாச்சி நகராட்சியை அதிமுக கைப்பற்ற வேண்டும் என்று பேசினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் PRK. குருசாமி, மாவட்ட பிரதிநிதிகள் அருணாச்சலம், இரும்பு குரு, நகர பொருளாளர் வருகை கனகு, அக்னீஷ் முகுந்தன், காளிமுத்து உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக வேட்பாளர்களுக்கு A,B,C படிவங்கள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் செய்த சாதனைகளையும், சட்டமன்ற தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் பொய்ப் பிரச்சாரங்களையும் மக்களிடையே கொண்டு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்று பொள்ளாச்சி நகராட்சியை அதிமுக கைப்பற்ற வேண்டும் என்று பேசினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் PRK. குருசாமி, மாவட்ட பிரதிநிதிகள் அருணாச்சலம், இரும்பு குரு, நகர பொருளாளர் வருகை கனகு, அக்னீஷ் முகுந்தன், காளிமுத்து உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.