கோவை மாவட்டம் தோலம்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி இருளர் இனத்தை சேர்ந்த ஒருவர் பலி.

கோவை மாவட்டம் தோலம்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி இருளர் இனத்தை சேர்ந்த நஞ்சன் என்பவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை:: கோவை மாவட்டம் தோலம்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி இருளர் இனத்தை சேர்ந்த நஞ்சன் என்பவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையேசோகத்தை ஏற்படுத்தியது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தோலம்பாளையம் அருகே மொட்டியூர், சீங்குழி உள்ளிட்ட சுமார் 10 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில், இருளர் இனத்தை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் யானை, காட்டெருமை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அவ்வப்போது வெளியே வருவது வழக்கம். 

இந்நிலையில், சீங்குழி பகுதியை சேர்ந்த நஞ்சன் (வயது 50) மற்றும் அவரது அக்கா மகன் நஞ்சப்பன் (வயது 28) ஆகிய இருவர் நேற்று மாலை 7 மணியளவில் மொட்டியூர் அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டி இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளனர்.

 

அப்போது,அப்பகுதியில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானைநஞ்சனை திடீரென்று தாக்கியுள்ளது. இதில், நஞ்சனுக்கு முகம் மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்றொருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காரமடை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற நபரை காட்டு யானை தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...