கோவையில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரிப்பு..!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் சுமார் 10 லட்சத்து 78 ஆயிரத்து 484 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

பச்சரிசி, கரும்பு, மிளகு, வெல்லம், ரவை, கோதுமை மாவு உள்பட 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு இதுவரை 94 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொங்கல் பரிசு விநியோகம் காரணமாக பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் வழங்க வேண்டிய அரிசி, பாமாயில், கோதுமை, சர்க்கரை போன்றவை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பொங்கல் முடிந்து பின்னரும் இதுவரை வாங்காத பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கோவை ஆவாரம்பாளையம், பூமார்க்கெட், ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...