கோவையில் துவங்கிய ஜல்லிக்கட்டு விழா

கோவையில் இன்று ஜல்லிக்கட்டு திருவிழா - 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுடன் துவங்கியது. விழாவை, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை: கோவையில் இன்று ஜல்லிக்கட்டு திருவிழா - 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுடன் துவங்கியது. விழாவை, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை செட்டிபாளையத்தில், கோவை மாவட்டம் நிர்வாகம் கண்காணிப்பில்  கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.



ஜல்லிக்கட்டு விழாவை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். 

இந்த ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.



மாடுகளுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

மாடுகளுடன் வருபவர்களும், மாடு பிடி வீரர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சிக்கு வரக்கூடிய அலுவலர்கள், பத்திரிக்கையாளர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டிருந்தார்.அதன்படி, சான்றிதழ் கொண்டு வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, நேற்று மாலை முதலே வெளியூர்களில் இருந்து காளைகள் வர துவங்கியது. தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டி போட்டியை தொலைகாட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும் பகுதியில், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



முதல் காளையாக சரவணம்பட்டி பெருமாள் கோவில் காளை, களம் இறங்கியது. மேலும், முதல் சுற்று முடிவில் 12 பேர் மாடு பிடித்து, இறுதி சுற்றுக்கு தேர்வாகினர்.

அதே போல், 3 வது சுற்று நிறைவில், இதுவரை 376 காளைகள் களம் கண்டுள்ளன. அதில், 15 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். 

4 வது சுற்றுக்கு பச்சை பனியன் அணிந்த மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர். இதுவரை, 124 மாடுகளுக்கு தங்க காசுகள் வழங்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...