போக்சோவில் கைது செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், அந்த நபரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் வசித்து வரும் 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியிடம், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய அவரது உறவினர், ஆசை வார்த்தைகள் பேசி கடந்த 9ம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, நேற்று மீண்டும் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். சிறுமி அதனை மறுத்திடவே தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், சிறுமியின் உறவினர்களிடம் சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறும் கேட்டுள்ளார்.
இதனால், அந்த நபருக்கும் சிறுமியின் வீட்டாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சிறுமி தனது உறவினர்களிடம், தனக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், குற்றவாளியை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் வசித்து வரும் 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியிடம், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய அவரது உறவினர், ஆசை வார்த்தைகள் பேசி கடந்த 9ம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, நேற்று மீண்டும் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். சிறுமி அதனை மறுத்திடவே தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், சிறுமியின் உறவினர்களிடம் சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறும் கேட்டுள்ளார்.
இதனால், அந்த நபருக்கும் சிறுமியின் வீட்டாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சிறுமி தனது உறவினர்களிடம், தனக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், குற்றவாளியை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.