கோவையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..!

போக்சோவில் கைது செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், அந்த நபரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் வசித்து வரும் 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியிடம், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய அவரது உறவினர், ஆசை வார்த்தைகள் பேசி கடந்த 9ம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, நேற்று மீண்டும் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். சிறுமி அதனை மறுத்திடவே தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், சிறுமியின் உறவினர்களிடம் சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறும் கேட்டுள்ளார்.

இதனால், அந்த நபருக்கும் சிறுமியின் வீட்டாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சிறுமி தனது உறவினர்களிடம், தனக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், குற்றவாளியை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...