மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவமனை மற்றும் 89 சுகாதார நிலையங்களில் இந்த பூஸ்டர் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி முகாம் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் நாளை நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்துள்ளது. கோவிட் 2 'டோஸ்' போடப்பட்டாலும், 3வது 'டோஸ்' பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என, மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதன் அடிப்படையில், இந்த பூஸ்டர் ஊசி முன்களப்பணியாளர், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு, மூன்றாம் டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி கடந்த, 10ம் தேதியன்று துவங்கப்பட்டது.
இத்திட்டத்தில், 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர். தற்போது வரை கோவை மாவட்டத்தில், 9 ஆயிரத்து 200 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நாளை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் 13 அரசு மருத்துவமனை, 89 சுகாதார நிலையங்களில் இந்த முகாம் நாளை நடக்கவுள்ளது. தகுதி உடைய நபர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்துள்ளது. கோவிட் 2 'டோஸ்' போடப்பட்டாலும், 3வது 'டோஸ்' பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என, மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதன் அடிப்படையில், இந்த பூஸ்டர் ஊசி முன்களப்பணியாளர், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு, மூன்றாம் டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி கடந்த, 10ம் தேதியன்று துவங்கப்பட்டது.
இத்திட்டத்தில், 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர். தற்போது வரை கோவை மாவட்டத்தில், 9 ஆயிரத்து 200 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நாளை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் 13 அரசு மருத்துவமனை, 89 சுகாதார நிலையங்களில் இந்த முகாம் நாளை நடக்கவுள்ளது. தகுதி உடைய நபர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், என்று தெரிவித்தார்.