சம்பவம் குறித்து விஜயகுமார், சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பா.ஜ.க. இளைஞரணி துணைச் செயலாளர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை அருகே மொபட்டுக்கு தீ வைக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கோவை சூலூர் ஜல்லிப்பட்டி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (47). டிரைவராக வேலைப்பார்க்கும் இவர், தி.மு.க வில் நிர்வாகியாகவும் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவர் கோவை வடக்கு பா.ஜ.க இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில், நேற்று விஜயகுமார் ஜல்லிப்பட்டி பகுதியல் மொபட்டில் சென்று கொண்டிருந்த போது, குடிபோதையில் இருந்த செல்வகுமார் திடீரென விஜயகுமார் வந்த வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து, அதனை விஜயகுமார் மொபட் மீது ஊற்றி தீ வைக்க முயற்சி செய்த போது, அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த செல்வகுமார் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். காயமடைந்த விஜயகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து விஜயகுமார், சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பா.ஜ.க. இளைஞரணி துணைச் செயலாளர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சூலூர் ஜல்லிப்பட்டி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (47). டிரைவராக வேலைப்பார்க்கும் இவர், தி.மு.க வில் நிர்வாகியாகவும் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவர் கோவை வடக்கு பா.ஜ.க இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில், நேற்று விஜயகுமார் ஜல்லிப்பட்டி பகுதியல் மொபட்டில் சென்று கொண்டிருந்த போது, குடிபோதையில் இருந்த செல்வகுமார் திடீரென விஜயகுமார் வந்த வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து, அதனை விஜயகுமார் மொபட் மீது ஊற்றி தீ வைக்க முயற்சி செய்த போது, அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த செல்வகுமார் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். காயமடைந்த விஜயகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து விஜயகுமார், சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பா.ஜ.க. இளைஞரணி துணைச் செயலாளர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.