கோவை அருகே மொபட்டுக்கு தீ வைக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது

சம்பவம் குறித்து விஜயகுமார், சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பா.ஜ.க. இளைஞரணி துணைச் செயலாளர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை அருகே மொபட்டுக்கு தீ வைக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

கோவை சூலூர் ஜல்லிப்பட்டி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (47). டிரைவராக வேலைப்பார்க்கும் இவர், தி.மு.க வில் நிர்வாகியாகவும் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவர் கோவை வடக்கு பா.ஜ.க இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில், நேற்று விஜயகுமார் ஜல்லிப்பட்டி பகுதியல் மொபட்டில் சென்று கொண்டிருந்த போது, குடிபோதையில் இருந்த செல்வகுமார் திடீரென விஜயகுமார் வந்த வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து, அதனை விஜயகுமார் மொபட் மீது ஊற்றி தீ வைக்க முயற்சி செய்த போது, அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த செல்வகுமார் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். காயமடைந்த விஜயகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து விஜயகுமார், சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பா.ஜ.க. இளைஞரணி துணைச் செயலாளர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...