இரவு நேர ஊரடங்கில் சட்டத்திற்குப் புறம்பாக 4-ஆம்னிப் பேருந்துகள் இயக்கியது தெரியவந்ததையடுத்து, பேருந்துகளுக்கு ரூ.1-லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
கோவை: இரவு நேர ஊரடங்கில் சட்டத்திற்குப் புறம்பாக 4 ஆம்னிப் பேருந்துகள் இயக்கியது தெரியவந்ததையடுத்து பேருந்துகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் 15-ந் தேதி இரவு 10 மணி முதல் இன்று (17-ந் தேதி) காலை 5 மணி வரை பொது ஊரடங்கு அமலில் இருந்தது.
இதனால் தமிழகத்தில் பொது போக்கு வரத்துத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால் சில ஆம்னிப் பேருந்துகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம் செய்து பேருந்துகளை இயக்கி உள்ளனர்.
இது குறித்து கோவை சரகம் இணைப்போக்குவரத்து ஆணையருக்குப் புகார் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கம் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தணிக்கையின் போது சட்டத்திற்குப் புறம்பாக 4 ஆம்னிப் பேருந்துகள் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து பேருந்துகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், விதிகளை மீறி பேருந்துகளை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை சரக இணைப்போக்குவரத்து ஆணையர் உமாசக்தி தெரிவித்தார்.