கோவையில் இரவு நேர ஊரடங்கில் இயங்கிய 4-பேருந்துகளுக்கு ரூ.1-லட்சம் அபராதம்

இரவு நேர ஊரடங்கில் சட்டத்திற்குப் புறம்பாக 4-ஆம்னிப் பேருந்துகள் இயக்கியது தெரியவந்ததையடுத்து, பேருந்துகளுக்கு ரூ.1-லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.



கோவை: இரவு நேர ஊரடங்கில் சட்டத்திற்குப் புறம்பாக 4 ஆம்னிப் பேருந்துகள் இயக்கியது தெரியவந்ததையடுத்து பேருந்துகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் 15-ந் தேதி இரவு 10 மணி முதல் இன்று (17-ந் தேதி) காலை 5 மணி வரை பொது ஊரடங்கு அமலில் இருந்தது.

இதனால் தமிழகத்தில் பொது போக்கு வரத்துத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால் சில ஆம்னிப் பேருந்துகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம் செய்து பேருந்துகளை இயக்கி உள்ளனர்.

இது குறித்து கோவை சரகம் இணைப்போக்குவரத்து ஆணையருக்குப் புகார் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கம் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தணிக்கையின் போது சட்டத்திற்குப் புறம்பாக 4 ஆம்னிப் பேருந்துகள் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து பேருந்துகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், விதிகளை மீறி பேருந்துகளை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை சரக இணைப்போக்குவரத்து ஆணையர் உமாசக்தி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...