டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் பொங்கல் விழாவின் போது பாகனை அடித்துக் கொன்ற யானை..!

நேற்று யானை பொங்கல் விழாவை முடித்து விட்டு, யானை அசோக்கை, பாகன் ஆறுமுகம் மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு அழைத்து சென்ற போது, அவரை திடீரென யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தியில் யானைகள் முகாமில் நேற்று நடந்த யானை பொங்கல் விழாவில், பாகனை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தியில் யானைகள் முகாமில் வனத்துறை சார்பில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.



முகாமில், நேற்று யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இதில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அசோக் என்ற 12 வயது யானை பங்கேற்றது. இந்த யானையின் பாகனாக கோழிகமுத்தி மலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (45) மற்றும் முருகன் யானையுடன் இருந்தனர்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு, யானை அசோக்கை, பாகன் ஆறுமுகம் மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது, திடீரென அந்த யானை ஆறுமுகத்தை தாக்கியது. இதில் கீழே விழுந்த ஆறுமுகத்தின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் காயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்தவர்கள் ஏற்கனவே ஆறுமுகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த, ஆனைமலை காவல் துறையினர், பாகன் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுபற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறுமுகத்தை தாக்கிய 12 வயதான அந்த யானை ஏற்கனவே வண்டலூர் பூங்காவில் இருக்கும் போது, 8 வயதில் ஒருவரை தாக்கியதாகவும், அதனால் டாப்சிலிப் முகாமிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் நாளன்று ஏற்பட்ட இச்சம்பவம் டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...