கோவை கிணத்துக்கடவு அருகே எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!

மேலும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் கலந்துகொண்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுகவினர் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழாவினை இன்று அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.



நகர செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் கலந்துகொண்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த விழாவில், மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் மனோகரன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் கண்ணம்மாள், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தலைவர் நாகராணி கனகராஜ், லட்சுமணன், கிரி, கார்த்திக், தங்கராஜ், தண்டபாணி, நாகராஜ், நடராஜ், மகேஷ் அரவிந்த், மாரிமுத்து, கோபால் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...