கோவை கிணத்துக்கடவு அருகே மனைவி, மகள் மாயம் - கணவர் காவல் நிலையத்தில் புகார்..!

இதையடுத்து, புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இருவரையும் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு முள்ளுப்பாடியில் மனைவி, மகள் மாயமானதையடுத்து கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (30), இவருக்கு இந்திராணி (28) என்ற மனைவியும், 13 வயதில் மகளும் உள்ளனர்.

இந்நிலையில், மணிகண்டனுக்கும் மனைவி இந்திராணிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்த இந்திராணி மற்றும் 13 வயது மகள் வெளியே சென்றவர்கள் திரும்பி வரவில்லை எனத் தெரிகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்த மணிகண்டன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்துத் தருமாறு நேற்று புகார் அளித்தார்.

இதனையடுத்து, புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இருவரையும் தேடி வருகின்றனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...