பொள்ளாச்சியில் ஆதரவற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவை கோரிக்கை

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவை கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவை கோரிக்கை வைத்துள்ளனர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

தற்போது இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்குநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை உள்ளிட்ட தன்னார்வலர்கள் காலை, மதியம், இரவு உள்ளிட்ட மூன்று வேளைகளிலும் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

இன்று மதியம் ஆதரவற்றவர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி நேரில் வந்து உணவு பொட்டலங்களை வழங்கினார்.



பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்பபரிசோதனை மேற்கொண்டனர்.

ஆதரவற்ற நிலையில் வசிக்கும் இவர்களைப் போன்ற பெரும்பாலானவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லை. சாலையோரங்களில் இருப்பதால் இவர்களுக்கு நோய்த்தொற்று எளிதாகப் பரவும் அபாயம் உள்ளது.

எனவே சுகாதாரத்துறையினர் இவர்கள் மீது கருணை கொண்டு ஆவணங்கள் இல்லாமல் தடுப்பூசி செலுத்தி கொரோனா, ஒமக்கிரான் நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற வழிவகை செய்யவேண்டுமென்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...