பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவை கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவை கோரிக்கை வைத்துள்ளனர்.
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
தற்போது இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்குநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை உள்ளிட்ட தன்னார்வலர்கள் காலை, மதியம், இரவு உள்ளிட்ட மூன்று வேளைகளிலும் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.
இன்று மதியம் ஆதரவற்றவர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி நேரில் வந்து உணவு பொட்டலங்களை வழங்கினார்.

பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்பபரிசோதனை மேற்கொண்டனர்.
ஆதரவற்ற நிலையில் வசிக்கும் இவர்களைப் போன்ற பெரும்பாலானவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லை. சாலையோரங்களில் இருப்பதால் இவர்களுக்கு நோய்த்தொற்று எளிதாகப் பரவும் அபாயம் உள்ளது.
எனவே சுகாதாரத்துறையினர் இவர்கள் மீது கருணை கொண்டு ஆவணங்கள் இல்லாமல் தடுப்பூசி செலுத்தி கொரோனா, ஒமக்கிரான் நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற வழிவகை செய்யவேண்டுமென்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
தற்போது இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்குநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை உள்ளிட்ட தன்னார்வலர்கள் காலை, மதியம், இரவு உள்ளிட்ட மூன்று வேளைகளிலும் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.
இன்று மதியம் ஆதரவற்றவர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி நேரில் வந்து உணவு பொட்டலங்களை வழங்கினார்.
பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்பபரிசோதனை மேற்கொண்டனர்.
ஆதரவற்ற நிலையில் வசிக்கும் இவர்களைப் போன்ற பெரும்பாலானவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லை. சாலையோரங்களில் இருப்பதால் இவர்களுக்கு நோய்த்தொற்று எளிதாகப் பரவும் அபாயம் உள்ளது.
எனவே சுகாதாரத்துறையினர் இவர்கள் மீது கருணை கொண்டு ஆவணங்கள் இல்லாமல் தடுப்பூசி செலுத்தி கொரோனா, ஒமக்கிரான் நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற வழிவகை செய்யவேண்டுமென்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.