ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக, கிணத்துக்கடவு பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக, கிணத்துக்கடவு பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கோவை-பொள்ளாச்சி சாலை, ஆர்.எஸ்.ரோடு, வீரப்பகவுண்டனூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து ஏதும் இல்லாததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர்ந்து புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் கிணத்துக்கடவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றி வரும் நபர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கோவை-பொள்ளாச்சி சாலை, ஆர்.எஸ்.ரோடு, வீரப்பகவுண்டனூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து ஏதும் இல்லாததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர்ந்து புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் கிணத்துக்கடவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றி வரும் நபர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.